Posts

Showing posts from October, 2017

பெண் தன்னிலைகளின் அகப்புற பரிமாணம் (நவீனப் பெண் தன்வரலாற்றுப் புனைவுகளினூடான வாசிப்பு)

Image
       நிலவென்றும் , மலரென்றும் வர்ணிக்கப்படும் பெண்களின் குணம் மென்மை என காலம்காலமாகக் கூறப்பட்டு வருகிறது. அந்தவகையில் , நெருப்பை உமிழும் சூரியனாக வாழ்க்கை களவாடப்படும்போது எல்லாப் பெண்களுமே நிலவாக இருப்பதில்லை. சிலர் நெருப்பை உமிழும் சூரியனாகவே மாறுகிறார்கள். அவ்வாறு பெண்களின் மறைக்கப்பட்ட கொடும் வாழ்க்கையைப் பதிவு செய்யும் உலகளவிலான படைப்புகள் பல தமிழிலும் , தமிழ் மொழிபெயர்ப்புகளிலும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆண் பெண் என்ற இருநிலையில் பொதுவாக வரலாறு என்பது வெற்றிகளின் தொகுப்பாகவும் ஆண்களின் வீரதீர சாகசங்களைப் பேசும் ஒரு ஆவணமாகவே நெடுங்காலமாகவே நம்கண்முன் எல்லாநிலையிலும் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் , பெண்களின் பார்வையில் இவர்களுக்கான அனுபவ வரலாறுகள் எழுதப்படுவது மிக மிகக் குறைவுதான். இவர்களின் மனதிற்குள் தன் வாழ்வனைத்தையும் போட்டு மக்கவைத்து செத்துப் போவதே மேன்மை என்றுதான் இன்றுவரை வீடுகள்தோறும் போதிக்கப்பட்டு வருகிறது. எனவேதான் , பெண் சுயசரிதைப் படைப்புகளின் அகப்புற பரிமாணங்களை இன்றைய சூழலில் பல்வேறு கோணங்களில் ஆராயவேண்டியுள்ளது. அந்தவரிச...