Posts

கல்லூரியை விட்டு விடை பெறுகிறார்கள்... கல்வியை விட்டல்ல!

Image
 *என் மனதிற்கினிய மாணவ மாணவிகளுக்கு* (2022-25 Batch) எங்கள் வாசல் தேடி வந்த வசந்தகால பறவைகள் நீங்கள்! இன்று உங்கள் வாழ்வின் ஓர் இனிய சகாப்தம் முடிவடைகிறது! இன்று  புன்னகைக்கும் நீங்கள் இங்கிருந்து புறப்படவும் தயாராகுங்கள்! நாளை புதியதோர் உலகம் உங்களுக்காக உதயமாகிறது! இன்னும் சில நாட்களுக்குள் சில மாதங்களுக்குள் சில வருடங்களுக்குள் உங்களில் பலர் ஒருவருக்கொருவர் உறவாடிக் கொள்வதை மறந்திருப்பீர்கள்! மெல்ல மெல்ல சிலரின் பெயர்களையும் முகங்களையும் நினைவுபடுத்த வேண்டிய நிர்பந்தம் உங்களுக்குள் உருவாகியிருக்கும்! சுகதுக்கங்களில் நட்புக்காக வந்து நிற்கும் அந்த நால்வர் மட்டுமே அவ்வப்போது இந்த கல்லூரிகால நினைவுகளை சுமந்து நிற்கும் சுமைதாங்கியாக சுழன்று வருவீர்கள்! நெருங்கிப்பழகிய நட்பின் அழைப்புகளை ஏற்கக்கூட நேரமில்லாமல் காலப்போக்கில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேடலை நோக்கி விரைந்து ஓடிக் கொண்டிருப்பீர்! அன்று அங்கு அவனைப் பார்த்தேன் இன்று இங்கு இவனைப் பார்த்தேன் என்று போகிற போக்கில் நலம் விசாரித்துவிட்டு மூன்றாவது மனிதரைப் போல் உங்கள் பக்கத்தில் உட்கார...

கலையுலகில் தவிர்க்க முடியாத தமிழ் சினிமா தங்கலான்! - திரை விமர்சனம் முனைவர் மு.செல்லமுத்து.

Image
 

உலகசினிமா மாமேதை அகிரா குரோசாவாவின் செவன் சாமுராய் - 1954.

Image
புகழ்பெற்ற உலகத்திரைப்படங்களில் சமீபத்தில் கண்டு வியந்தது ஜப்பானிய திரைப்பட மாமேதை அகிரா குரோசாவா இயக்கிய செவன் சாமுராய். 1954 இல் இத்திரைப்படம் வெளிவந்துள்ளது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் தன்னிலை குறையாமல் தனித்துதான் நிற்கிறது. இன்று இருப்பது போன்ற எவ்வித நவீனக் கருவிகளும் திரைத்துறையில் வந்திராத அக்காலகட்டத்தில் அவரது முயற்சிகள் அளப்பரியது ஆகச்சிறந்தது. தொழில்நுட்பம் பின்தங்கியிருந்த அன்றைய காலகட்டத்தில் இத்தனை திறமையாக செவன் சாமுராய் திரைப்படத்தை இவரால் எப்படி இயக்க முடிந்தது என்று வியந்துபோனேன்.      செவன் சாமுராய் படத்தின் திரைக்கதை ஐப்பானிய கிராமமொன்றில் 16 ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் நடப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மலையடிவாரத்தில் இருக்கிற சிறு கிராமத்தின் விவசாய உற்பத்தித் தானியங்களையும் பல்வேறு வளங்களையும் பல முரட்டுத்திருடர்கள் கொள்ளையடிக்க வருவதை அறிந்த அக்கிராமத்தவர்கள் தங்கள் நிலங்களையும் வளங்களையும் எப்படியாவது தற்காத்துக் கொள்ளவேண்டும் என்ற உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இதற்காக நகரவெளியில் இருந்து கூலிக்கமர்த்தப்பட்ட ஏழு தலைசிறந்...

நல்வாழ்த்துக்களும் வீரவணக்கங்களும் !

Image
                            சுழலும் பூமியில் முன்னொரு நாள் சுதந்திரக்காற்று  நம் மண்ணில்  பட்டுப் படர்ந்ததால்  பட்டொளி வீசி பறந்தது நம் பாரதக்கொடி ! மாறுதல்களை எதிர்பார்த்தோம் மாற்றங்களும் நிகழ்ந்தன மனிதம்தான் செழிக்கவில்லை தன்னை மட்டுமே செதுக்கிக்கொள்ளும் சிலைகளானோம்  உடைந்து நொறுங்கிய பலரை ஒன்றிணைக்கவும் மறந்துபோனோம் !  விடுதலை பெற்ற தேசம்தான் ஒரு மரங்களின்  மதிப்பைக்கூட இன்னும் உணரவில்லையேயென்ற ஆதங்கம் உள்ளேயிருந்து எனக்குள் வருத்தினாலும், மனிதம் மேன்மையுற  எப்போதாவது எதையேனும்  நம் தேசம் செய்திருக்கிறது என்ற நினைவுகளும் ‘செய்வோம்’ என்ற  நம்பிக்கையும்தான் இன்முகத்தோடு இந்நாளில் காலந்தோறும் நம்மில் பலரை கைகுலுக்கச் செய்கிறது... விடுதலைக்குக் காரணமான  வீரத்தியாகிகளே !  இதே நம்பிக்கையுடன் எம் மண்ணில்  இன்று மலர்ந்த கோடானகோடி பூக்கள் உங்கள்மீது தூவப்படுகிறது நிமிர்ந்த நெஞ்சுடன்  உங்களுக்கு என் வீர வணக்கங்களும்,...

சண்டிவீரன் திரைப்படம் - ஒரு பார்வை…

Image
   எந்தவொரு சமுதாய நிகழ்வுகளையும் காலத்திற்கேற்ற இரசனையோடு வாழும் மனிதர்களுக்கும் வருங்கால மனிதர்களுக்கும் எடுத்துச்சொல்லும் சேவையில் பெரும்பங்கு வகிப்பது ஊடகம் என்று சொல்லலாம். அந்த வகையில், A.சற்குணம் இயக்கத்தில், அதர்வா ஆர்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சண்டிவீரன் திரைப்படத்தின் திரைக்கண்னோட்டத்தினை இன்று பார்க்கலாம். போதுமான வாழ்வியல் தேவைகள், தான் பிறந்த மண்ணில் கிடைக்காத பொழுது அல்லது ஜனநாயகம் தர மறுக்கின்ற பொழுது அங்கிருந்து  இடம்பெயரும் சூழ்நிலை பெரும்பாலும் கிராமப்புறங்களில் தான் இன்றும் நிலவுகிறது. எந்தவொரு உயிரினங்களின் அடிப்படைத்தேவையும் அத்தியாவசியத் தேவையும் முதலில் தண்ணீர் தான், இயற்கை தந்த மிகப்பெரிய கொடையும் அதுதான். சண்டிவீரன் திரைப்படமும் தமிழகத்தின் ஏதோ ஒரு கடைக்கோடிக் கிராமத்தில் நிகழும் இந்தப் பிரச்சனையைத் தான் அதர்வா ஆர்த்தியின் காதலோடும், இரண்டு கிராமத்தின் கலவரத்தோடும் சில பல நகைச்சுவையோடு சித்தரிக்கின்றது.  எந்தவொரு சமுதாய மாற்றத்திற்குப் பின்னணியிலும் கட்டாயம் ஒரு உண்மையான போராளியின் உயிர்த்தியாகம் குருதிவடித்து உணர்த்...

தனிஒருவன் - திரைவிமர்சனம்…

Image
         இந்த நூற்றாண்டின் நகரமயமாக்கல் சூழலில் நவீன ஆயுதங்களோடும் மாறுபட்ட அறிவியல் சிந்தனைகளோடும் கண்ணுக்குப் புலனாகாமல் புத்திக்கூர்மையால் ஒவ்வொரு நிமிடமும் பெருங்குற்றங்களுக்கு திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகத்தையே புரட்டிப்போடும் விஞ்ஞானத் தேடலில் மிகமுக்கியமான ஒன்று அறிவுத்திருட்டு. கண்முன்னே நிகழும் சமுதாய அவலங்களைத் தட்டிக்கேட்க தைரியம் இல்லாத இன்றைய மனிதர்களுக்கிடையில், கண்ணுக்கு மறைவாக நிகழும் அறிஞர்களின் அறிவியல் ஊழலை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட துடிக்கும் தனிஒருவன் பயனத்தின் பின்னனியை கல்பாத்தி ள.அசோகரம் தயாரிப்பில் இயக்குநர் ராஜாவின் படைப்பில் ஜெயம்ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தனிஒருவன் திரைப்படத்தின் வெற்றியை இன்று விமர்சனத்தில் கொண்டாடலாம். ஜெயம்ரவியின் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரும்பாலும் சமுதாய அவலங்களை நேரிடையாக தோலுரிக்கும் போராட்டம் வாய்ந்ததாகவே அமைகிறது என்பது யாவரும் அறிந்த உண்மை. இதற்குக் காரணம் அவருடைய பண்பும் பயனள்ள படங்களை தேர்ந்நெடுத்து நடிக்கும் பக்குவமும் திறமையும் என்று சொல்லலாம்...

தா.பாண்டியன் - திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம் நூல் விமர்சனம்

தமிழகத்தின் மானுட மேம்பாட்டுக்காக ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கங்களின் விடுதலைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்ட   அரசியல் வித்தகர் தா.பாண்டியன் அவர்கள் இயற்றிய ‘ திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம் ’ என்னும் நூல் பற்றிய விமர்சனத்தை இன்று உங்கள் முன் வைக்கிறேன். வள்ளுவரை நம் காலத்திற்குக் கொண்டு வந்து , நம் விருப்பப்படியான கண்ணோட்டத்தில் விளக்கம் கொடுத்து நம்மைப் போல ஆக்கிவிட முயற்சிக்கக்கூடாது. நம்முடைய முழு அறிவையும் பயன்படுத்தி , சான்றோர்களின் துணையையும் நாடி , அவர் காலத்திற்குச் சிந்தனை வழி செல்லவும் , அக்கால சமூக நடைமுறைகளை யூகித்துப் புரிந்து கொள்ளவும் முயல்வதே அறிவார்ந்த செயலாகும். அந்தவகையில் , தெளிந்த அறிவுடன் தா.பாண்டியன் அவர்களின் முயற்சியில் கடந்த 2015 ஆம் ஆண்டு நீயூ செஞ்சுரி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட ‘ திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம் ’ என்னும் நூலானது , உண்மையான ஆராய்ச்சி நூலாக எக்காலத்திற்கும் பயனள்ள உயர்ந்த ஆராய்ச்சி நூலாக இலக்கிய வாசிப்பில் ஈடுபாடுடையவர்கள் போற்றத்தகும் என்னும் கருத்தினை இந்நூல் விமர்சனத்தின் வாயிலாக உங்கள் முன் உணர்த்த விரும்பு...