சண்டிவீரன் திரைப்படம் - ஒரு பார்வை…
எந்தவொரு சமுதாய நிகழ்வுகளையும் காலத்திற்கேற்ற இரசனையோடு வாழும் மனிதர்களுக்கும் வருங்கால மனிதர்களுக்கும் எடுத்துச்சொல்லும் சேவையில் பெரும்பங்கு வகிப்பது ஊடகம் என்று சொல்லலாம். அந்த வகையில், A.சற்குணம் இயக்கத்தில், அதர்வா ஆர்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சண்டிவீரன் திரைப்படத்தின் திரைக்கண்னோட்டத்தினை இன்று பார்க்கலாம். போதுமான வாழ்வியல் தேவைகள், தான் பிறந்த மண்ணில் கிடைக்காத பொழுது அல்லது ஜனநாயகம் தர மறுக்கின்ற பொழுது அங்கிருந்து இடம்பெயரும் சூழ்நிலை பெரும்பாலும் கிராமப்புறங்களில் தான் இன்றும் நிலவுகிறது. எந்தவொரு உயிரினங்களின் அடிப்படைத்தேவையும் அத்தியாவசியத் தேவையும் முதலில் தண்ணீர் தான், இயற்கை தந்த மிகப்பெரிய கொடையும் அதுதான். சண்டிவீரன் திரைப்படமும் தமிழகத்தின் ஏதோ ஒரு கடைக்கோடிக் கிராமத்தில் நிகழும் இந்தப் பிரச்சனையைத் தான் அதர்வா ஆர்த்தியின் காதலோடும், இரண்டு கிராமத்தின் கலவரத்தோடும் சில பல நகைச்சுவையோடு சித்தரிக்கின்றது. எந்தவொரு சமுதாய மாற்றத்திற்குப் பின்னணியிலும் கட்டாயம் ஒரு உண்மையான போராளியின் உயிர்த்தியாகம் குருதிவடித்து உணர்த்...