விருதுநகர் வீரரின் அரசியலும் ஆளுமையும்
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர் ‘ பெருந்தலைவர் காமராசர் ’. தமிழகத்தின் மானுட மேம்பாட்டுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டும் குரல்கொடுத்தும் செயலாற்றியும் வாழ்ந்த தொண்டருக்குத் தொண்டர் , தலைவருக்குத் தலைவர் , அறிஞருக்கு அறிஞர் , அரசியல் வித்தகர் மாமேதை காமராசர். தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம் , தமிழக அரசியல் வரலாற்றில் “ பொற்காலமாக ” கருதப்படுகிறது. தன்னுடைய உழைப்பால் , தொண்டால் , படிப்படியாக உயர்ந்த இவர் , ‘ பெரும் தலைவர் ’, ‘ தென்னாட்டு காந்தி ’, ‘ கருப்புக் காந்தி ’, ‘ படிக்காத மேதை ’, ‘ ஏழைப் பங்களான் ’, ‘ கர்ம வீரர் ’, ‘ கிங் மேக்கர் ’, ‘ கல்விக்கண் திறந்தவர் ’ எனப் பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் இவரின் தன்னலமற்ற தொண்டிற்காக , இந்திய அரசு , இவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “ பாரத ரத்னா ” விருதினை வழங்கிச் சிறப்பித்தது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கிய பெருமையும் இவரைச்...







Comments
Post a Comment